Environment and Environmental policies of India
Environment and Environmental policies of India
➡ சுற்றுப்புறச் சூழல் (Environment):
‣ சுற்றுச் சூழல் என்பது நாம் சுவாசிக்கும் காற்று, புவியிலுள்ள நீர்நிலைகள், நம்மைச் சுற்றியுள்ள தாவரங்கள் மற்றும் விலங்குகள் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.
➡ சுற்றுச்சூழல் வேதியியல்:
‣ சுற்றுச்சூழல் வேதியியல் என்பது நீர், காற்று , மண், ஆகியவற்றில் காணப்படும் வேதிப்பொருட்கள் மற்றும் அவற்றில் செயல்படும் வேதியியல் தன்மை ஆகியவற்றையே சுற்றுச்சூழல் வேதியியல் என்கிறோம்.
➡ சுற்றுச்சூழல் மாசுபாடு:
‣ தாவரங்கள், விலங்குகள் மற்றும் மனிதர்கள் போன்றவற்றின் காரணமாக சுற்றுச்சூழலில் ஏற்படும் மாசுபாடு சுற்றுச்சூழல் மாசுபாடு எனப்படும்.
➡ மாசுபடுதலின் வகைகள்:
➊ மக்கும் மாசுபடுத்திகள்:
• இயற்கையான உயிரியல் செயல்முறைகளில் எளிதாக சிதைவடைய கூடிய மாசுபடுத்திகள்.
எடுத்துக்காட்டு - - - - தாவரம் மற்றும் விலங்கு கழிவுகள்
➋ மக்காத மாசுபடுத்திகள்:
• இயற்கையான உயிரியல் செயல்முறைகளில் எளிதாக சிதைவடையாத மாசுபடுத்திகள்.
எடுத்துக்காட்டு - - - - உலோக கழிவுகள், நெகிழிகள், கதிர்வீச்சுக் கழிவுகள்
➡ இந்தியாவில் சுற்றுச்சூழல் கொள்கைகள்:
‣ சுற்றுச்சூழலை பாதுகாப்பது ஒவ்வொருவரின் மிக முக்கியமான அடிப்படை கடமையாகும்.
‣ சுற்றுச்சூழல் மாசுபாட்டினால் நீர், நிலம் , காற்று ஆகியவை பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றன.
‣ இந்த சுற்றுச்சூழல் மாசுபாட்டினால் வெப்பநிலை மாற்றங்கள் ஏற்பட்டு வெப்பநிலை அதிகரித்து செல்கிறது. இதனால் புவி வெப்பமடைகிறது.
‣ இந்த சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், கட்டுப்படுத்தவும் அரசானது சில சட்டங்களை இயற்றியுள்ளது.
‣ இந்தியா தன் சுற்றுச்சூழல்
கொள்கைகளைக் கடந்த 30 ஆண்டுகளாக உருவாக்கிக் கொண்டு வந்துள்ளது.
‣ காற்று, நீர் மாசுபாடு, கழிவு மேலாண்மை மற்றும் பல்லுயிர் பாதுகாப்பு போன்ற சிக்கல்களைப் பாதுகாக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது.
‣ இந்தியா குறைந்த வளங்களுடன்
பொருளாதார மேம்பாட்டை அடைய பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
‣ நிலையற்ற காலநிலை, குறைந்த வளங்கள் போன்றவற்றை எதிர்கொண்டு , அணுகு முறைகளில் மாற்றம் கொண்டு, இந்தியா தனது பாதையில் சவால்களைச் சந்தித்து நிலையான மேம்பாட்டை அடைந்துள்ளது.
‣ இந்தியாவின் உச்ச நீதிமன்றம்
தனது தீர்ப்புகள், நீதிமன்ற வழிகாட்டுதல்கள் மற்றும் கூடுதல் அதிகாரங்கள் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் புதிய மாற்றங்களை
அறிமுகப்படுத்தி, நடைமுறைப்படுத்த
உத்திரவிட்டுள்ளது.
‣ இந்திய அரசியலமைப்பின் பிரிவு
51A (g) காடுகள், ஏரிகள், ஆறுகள் மற்றும் காட்டு உயிர்கள் மற்றும் இயற்கைச் சூழலைப் பேணவும், மேம்படுத்தவும் அனைத்து உயிரினங்களையும் பாதுகாக்கவும் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் கடமைப்பட்டுள்ளனர் என்று வலியுறுத்துகிறது.
‣ நாட்டின் பொருளாதார மேம்பாடே
வாழ்க்கைத் தரத்தை நிர்ணயம் செய்கிறது.
‣ இதன் பொருள் மக்களுக்கு அதிக வருமானம்,திறன் மிக்கக் கல்வி, சிறந்த சுகாதாரம்,ஊட்டச்சத்து உணவு, வறுமையற்ற நிலை மற்றும் சம வாய்ப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு வாழ்வதற்கு ஏற்ற சூழலை ஏற்படுத்துவதாகும்.
‣ இதற்கான சட்டங்களை உருவாக்குவதே இந்தியாவின் சுற்றுச் சூழல் கொள்கைகள் ஆகும்.
static gk in tamil
Comments
Post a Comment